sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கடல்மங்கலம் ஏரியில் மீன் பிடிப்பதில் தனிநபர்கள் ஆதிக்கம் அரசுக்கு வருவாய் இழப்பு என குற்றச்சாட்டு

/

கடல்மங்கலம் ஏரியில் மீன் பிடிப்பதில் தனிநபர்கள் ஆதிக்கம் அரசுக்கு வருவாய் இழப்பு என குற்றச்சாட்டு

கடல்மங்கலம் ஏரியில் மீன் பிடிப்பதில் தனிநபர்கள் ஆதிக்கம் அரசுக்கு வருவாய் இழப்பு என குற்றச்சாட்டு

கடல்மங்கலம் ஏரியில் மீன் பிடிப்பதில் தனிநபர்கள் ஆதிக்கம் அரசுக்கு வருவாய் இழப்பு என குற்றச்சாட்டு


ADDED : மே 02, 2024 01:04 AM

Google News

ADDED : மே 02, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல்மங்கலம் கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான சித்தேரி மற்றும் பெரிய ஏரி என, இரண்டு ஏரிகள் உள்ளன.

இதில், 300 ஏக்கர் பரப்பிலான பெரிய ஏரியில், ஆண்டு தோறும் பருவ மழையை தொடர்ந்து ஏரி மீன்களை குத்தகை விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை ஏரி மீன்கள் ஏலம் விடாமல் விடுபட்டுள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர், நவீன முறையிலான வலைகளை பயன்படுத்தி அதிக மீன்களை பிடித்து தினமும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, கடல்மங்கலம் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் வீராசாமி கூறியதாவது:

கடல்மங்கலம் ஏரி மீன்களை குத்தகை விடக்கோரி ஏற்கனவே நீர்வளத் துறை செயற்பொறியாளரிடத்தில் மனு அளித்து உள்ளோம்.

தற்போது தனிநபர்கள் மீன்களைப் பிடித்து தனிப்பட்ட முறையில் வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, கடல்மங்கலம் ஏரியில் கடந்த ஆண்டு மீன் ஏலம் விட்டதைப் போல் இந்த ஆண்டும் குத்தகைக்கு விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us