sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

துார்வாரிய குப்பை கழிவுகள் அப்புறப்படுத்த வலியுறுத்தல்

/

துார்வாரிய குப்பை கழிவுகள் அப்புறப்படுத்த வலியுறுத்தல்

துார்வாரிய குப்பை கழிவுகள் அப்புறப்படுத்த வலியுறுத்தல்

துார்வாரிய குப்பை கழிவுகள் அப்புறப்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஆக 26, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.

இக்கால்வாய் மீது, 40 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்நிலையில், ரயில்வே சாலை, சிறுபாலம் அருகில், மஞ்சள் நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தின் கவர் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மஞ்சள்நீர் கால்வாயில் மண்டிக்கிடந்த குப்பை கழிவுகள் துார்வாரப்பட்டு கால்வாய் ஓரம் போடப்பட்டுள்ளது.

குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றாததால், காஞ்சிபுரத்தில் மழை பெய்தால் குப்பை கழிவுகள் கால்வாயில் சரிந்து விழுந்து மீண்டும் சிறுபாலத்தின் நீர்வழித்தடம் பகுதியில் அடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, மஞ்சள்நீர் கால்வாயில் துார்வாரிய கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us