/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 02:18 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பள்ளத்தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது. மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் மண் துகள் கழிவுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, திருக்காலிமேடு பள்ளத்தெரு கால்வாயில் மண்டியுள்ள புதர்களையும், குப்பை குவியலையும் முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.