sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

/

புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

புதர் மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 13, 2024 09:54 PM

Google News

ADDED : ஆக 13, 2024 09:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, 49வது வார்டு, ஓரிக்கை, பாரதிதாசன் நகர், பிரதான சாலையில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை மாநகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.

மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் மண் துகள் கழிவுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், இப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, ஓரிக்கை பாரதிதாசன் நகர் பிரதான சாலையோரம் உள்ள கால்வாயில் மண்டியுள்ள செடி, கொடிகளையும், குப்பை குவியலை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us