/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
காஞ்சியில் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 23ம் தேதி, காலை 10:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதி கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக வழங்கலாம். பிரச்னைகளை கலெக்டரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
மேலும், வேளாண் துறை நிபுணர்கள், வேளாண் துறைபற்றிய சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கஉள்ளனர்.
வேளாண்,தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய், கூட்டுறவு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.

