sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆழ்துளை கிணறு மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணியில் விவசாயிகள்

/

ஆழ்துளை கிணறு மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணியில் விவசாயிகள்

ஆழ்துளை கிணறு மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணியில் விவசாயிகள்

ஆழ்துளை கிணறு மின் மோட்டார்கள் பழுது நீக்கும் பணியில் விவசாயிகள்


ADDED : ஜூன் 29, 2024 11:11 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்படுகின்றன.

சொர்ணவாரி பருவத்தில், 20,000 ஏக்கர் மட்டுமேநெல் சாகுபடி செய்யப்பட்டது. கோடை மழைக்கு பிறகு, நெல், வேர்க்கடலை, உளுந்து ஆகிய பல வித பயிர்களை சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.

கடந்த சொர்ணவாரி பருவம் சாகுபடி செய்யாத விவசாயிகளின் ஆழ்துளை கிணறுகள் ஆங்காங்கே பழுதடைந்துள்ளன.

ஆடி பட்டத்திற்கு சாகுபடி செய்வதற்கு ஏற்ப, விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, புள்ளலுார், கம்மவார்பாளையம், மூலப்பட்டு, மணியாட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது நீக்கும் பணியை, தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக செய்து வருகின்றனர்.

ஒரு சில கிராமங்களில், மின் மோட்டார் பழுதுநீக்குவோரை, வெளியூரில் இருந்து அழைத்து வந்து, பழுது நீக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலமாக, ஆடி பட்டம் சாகுபடிக்கு மின் மோட்டார்கள் பயன் படுத்த சவுகரியமாகஇருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us