sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாகாணியம் வனப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு

/

மாகாணியம் வனப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு

மாகாணியம் வனப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு

மாகாணியம் வனப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு


ADDED : ஜூன் 19, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாகாணியம் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பை மற்றும்கழிவுகள் ஊராட்சி துாய்மை பணியாளர்கள்வாயிலாக சேகரித்து வருகின்றனர்.

அவ்வாறு சேகரமாகும்குப்பைக் கழிவுகள், மாகாணியம் -- சோமங்கலம் சாலையோரம் வனப்பகுதியில் கொட்டி எரிக்கின்றனர்.

ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் வாயிலாக, உரம் தயாரிக்கும் கிடங்கு இருந்தும், ஊராட்சியின் மெத்தனப் போக்கால் செயல்படாமல் உள்ளது.

இதனால், மாகாணியம்மலை அடிவாரத்தில், வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் குப்பை கொட்டி எரிக்கப்படுவதால், அப்பகுதிகளில் இரை மற்றும் தண்ணீர் தேடி வரும் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, வனப்பகுதிகளில் குப்பை கொட்டி எரிப்பதைத் தவிர்த்து, கால்நடை மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாக, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் வாயிலாக குப்பையை தரம் பிரித்துக் கையாள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us