ADDED : மார் 13, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களிலும், 274 ஊராட்சிகளில், வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தில், கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால், 23ம் தேதி, காலை 11:00 மணிக்கு, நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் வாயிலாக வரவு - செலவு கணக்கு படிவம் வைக்கப்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துஉள்ளார்.