/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்மவார்பாளையத்தில் சுகாதார துறை ஆய்வு
/
கம்மவார்பாளையத்தில் சுகாதார துறை ஆய்வு
ADDED : பிப் 14, 2025 07:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பரந்துார் வட்டார மருத்துவமனை கட்டுப்பாட்டில், கம்மவார்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு, பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார துறையினர் நேற்று கம்மவார்பாளையம் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
நண்ணீரில் தேங்கும் புழுக்களை அழிக்கும் முறையை குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எடுத்துரைத்தனர்.

