sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீர் வரத்து கால்வாயையொட்டி கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு

/

நீர் வரத்து கால்வாயையொட்டி கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு

நீர் வரத்து கால்வாயையொட்டி கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு

நீர் வரத்து கால்வாயையொட்டி கொட்டப்படும் கழிவால் சுகாதார சீர்கேடு


ADDED : மார் 02, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சி, அருணாச்சல பிள்ளைசத்திரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு, துாய்மை பணியாளர்களை கொண்டு, பேரூராட்சி நிர்வாகம் தினமும் சேகரித்து வருகின்றனர்.

தற்போது, அப்பகுதிவாசிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்கி வேலை செய்வோர், குடியிருப்புகளில் இருந்து இறைச்சி மற்றும் காய்கறி கழிவை, அங்குள்ள புக்கத்துறை நெடுஞ்சாலையோரத்தில், அருணாச்சல பிள்ளைசத்திரம் நீர் வரத்து கால்வாயையொட்டி, பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வீசி செல்கின்றனர்.

அப்பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல், சாலையோரத்தில் குப்பையை வீசி வருவது தொடர்ந்து நடக்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகள் முகம் சுளிக்கின்றனர்.

மேலும், காற்று வீசும் நேரங்களில் குப்பை பறந்து, வாகன ஓட்டிகள் மேலே விழுகிறது. தொடர்ந்து, துர்நாற்றம் வீசி வருவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us