sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

‛ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே' ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு போஸ்டர்

/

‛ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே' ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு போஸ்டர்

‛ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே' ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு போஸ்டர்

‛ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே' ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு போஸ்டர்


ADDED : பிப் 21, 2025 12:41 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஸ்ரீபெரும்புதுார் வந்து ராமானுஜரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஹந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இந்த கோவிலில், அலுவலக ரீதியாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், புரட்சி மகான் ஸ்ரீ ராமானுரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே என, ஸ்ரீபெரும்புதுார் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ஓய்வு பெற்ற ஒருவரை மீண்டும் நியமித்தது ஏன்?, ராமானுஜருக்கு அணிவித்த முத்துமணி மாலை எங்கே?, தொன்று தொட்டு காலமாக அதிகேசவ பெருமாளையும் ராமானுஜரையும் தோலில் சுமந்து செல்லும் பாதாங்கிகளுக்கு பதிலாக புதியதாக வெளியூர் ஆட்களை நியமித்தது ஏன்?, 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ராமானுஜர் மணிமண்டபத்தை பூட்டியே வைத்து பக்தர்களை ஏமாற்றுவது ஏன்? என, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநியைத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இது, பக்தர்ககள் மற்றும் பொதுமக்கள் மத்தில் பல சந்தேகங்களையும் அதிருப்பதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us