sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரகடத்தில் வங்கி எதிரே கழிவுநீர் வழிந்தோடி சீர்கேடு

/

ஒரகடத்தில் வங்கி எதிரே கழிவுநீர் வழிந்தோடி சீர்கேடு

ஒரகடத்தில் வங்கி எதிரே கழிவுநீர் வழிந்தோடி சீர்கேடு

ஒரகடத்தில் வங்கி எதிரே கழிவுநீர் வழிந்தோடி சீர்கேடு


ADDED : மே 17, 2024 11:53 PM

Google News

ADDED : மே 17, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் ஐ.ஓ.பி., வங்கி எதிரே உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வங்கியின் வாசலில் வழிந்தோடுவதால், வாடிக்கையாளர்கள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரகடம் மேம்பாலம் அருகே, ஐ.ஓ.பி., வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னக்குப்பம், மாத்துார், எறையூர், வட்டம்பாக்கம், வைப்பூர், பனையூர், எழிச்சூர், வடக்குப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், வங்கியின் வெளியில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வங்கியின் வாசலில் வழிந்தோடுகிறது.

இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், கழிவுநீரை மிதித்தபடி செல்லும் வாடிக்கையாளர்கள் நோய்த்தொற்று பரவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கழிவுநீர் தொட்டியில் இருந்து நிரம்பி வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us