/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கலாம் பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உத்தரவாதம்
/
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கலாம் பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உத்தரவாதம்
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கலாம் பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உத்தரவாதம்
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கலாம் பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை உத்தரவாதம்
ADDED : ஏப் 11, 2024 11:36 PM

சென்னை:தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் மருத்துவர் தமிழிசை, சைதாப்பேட்டை பகுதியில், தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் கல்வியில் இவ்வளவு முன்னேறி இருக்கிறது என்றால், அதற்கு காரணம் காமராஜர். அடையாறில் உள்ள அவரின் நினைவிடத்திற்குள் புதர்களும், வெளியில் கரும்பு சக்கை, குப்பை கழிவுகளும் தான் உள்ளன.
இப்படி தான், காமராஜரின் நினைவிடம் பராமரிக்கப்படுகிறது. ஒரு தலைவர் நினைவிடம் இப்படியா பராமரிக்கப்படும்? அதே மாதிரியே காந்தி மண்டபமும், ராஜாஜி மண்டபமும் உள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர்களின் நினைவிடங்கள், அருங்காட்சியகம் மாதிரி பராமரிக்கப்படுகின்றன.
காங்., தலைவர்கள் ஒருவருக்குகூட, காமராஜர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி பிரசாரத்தை துவங்க வேண்டுமென தோன்றவில்லை.
சோனியா, ராகுல், மல்லிகார்ஜுனா கார்கே தமிழகத்திற்கு வந்தபோது, காமராஜர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தி உள்ளனரா? கூட்டணி மட்டும் தான் நோக்கம்; தலைவர்களை மதிப்பது கிடையாது.
சென்னையில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு தி.மு.க., அரசு, மோசமாக பணிகளை செய்துள்ளது. வெள்ளம் வந்த பின் யாரும் வரவில்லை என்றால், வெள்ளம் வரும்படி ஏன் நடந்து கொண்டீர்கள்?
கோவிலம்பாக்கம் கால்வாய், பகிம்ஹாம் கால்வாயை பார்வையிடுங்கள். அதை பார்த்தாலே, எவ்வளவு அவலட்சணமான ஆட்சி நடக்கிறது என்பது தெரிந்துவிடும். டிசம்பர் வந்தாலே மக்கள் திக்... திக்... என பயத்தில் உள்ளனர்.
இந்நிலை மாறவும், தென்சென்னையை வளர்ச்சியடைந்த லோக்சபா தொகுதியாக மாற்றவும், தாமரை சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.

