/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்வெட்டு பயிலரங்கம் காஞ்சியில் நிறைவு
/
கல்வெட்டு பயிலரங்கம் காஞ்சியில் நிறைவு
ADDED : ஜூலை 21, 2024 06:31 AM
காஞ்சிபுரம் : தொல்லியல் கழகம், தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழகம்,கடல்சார் வரலாறுமற்றும் கடல்சார் துறை, விழுப்புரம் உமா அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சிசங்கரா கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில், ஐந்து நாட்கள் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாளானநேற்றுமுன்தினம், மாமண்டூர் குடைவரை கோவில்கள் கூழமந்தல் கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவில் ஆகிய இடங்களுக்குகளப்பயணமாகஅழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு, பல்லவர் காலம் மற்றும் சோழர் கால கட்டு மானம் குறித்து, விழுப்புரம் தொல்லியல் அறிஞர்வீரராகவன், காஞ்சிபுரம்அரசு அருகாட்சியககாப்பாட்சியர் உமாசங்கர்ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
பயிலரங்கம் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் பயிற்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு, சங்கரா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில்,கல்லுாரி முதல்வர்கலை ராம வெங்கடேசன் சான்றிதழ் வழங்கினார்.