/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாம்பாக்கத்தில் குப்பையால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
/
மாம்பாக்கத்தில் குப்பையால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
மாம்பாக்கத்தில் குப்பையால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
மாம்பாக்கத்தில் குப்பையால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 02:41 AM

ஸ்ரீபெரும்புதுார் : மாம்பாக்கம் சிவன் கோவில் அருகில் உள்ள மழைநீர் கால்வாய், குப்பை, கழிவுகளால் துார்ந்து போனதால், மழை காலங்களில் அப்பகுதியில் வெள்ள அபாயம் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில், சிவன் கோவில் அருகில், இப்பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயினை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கழிவுநீர், குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது.
இதனால், கால்வாய் அடையாளம் தெரியமல்துார்ந்த நிலையில்உள்ளது. இதனால், மழை காலங்களில் கால்வாய் வாயிலாக, மழைநீர் வெளியேற வழியின்றி, அருகில் உள்ள குடியுருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, மாம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில், சிவன் கோவில் அருகில் உள்ள மழைநீர் கால்வாயினை, பருவ மழைக்குள் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.