/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர்மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 11, 2024 12:01 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநக ராட்சி, 23வது வார்டு மாகாளியம்மன் கோவில் தெரு - கன்னிகோவில் தெருவிற்கு இடையே உள்ள குறுக்கு தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் உள்ளது.
முறையான பராமரிப்புஇல்லாததால், கால்வாயில்செடி, கொடிகள் புதர்போல மண்டி துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர்அப்பகுதியில் குடியிருப்புகளை சூழும் நிலைஉள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கு வதற்குள் மாகாளியம்மன் - கன்னிகோவில் குறுக்கு தெருவில் மழை நீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.