sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மஞ்சள்நீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

/

மஞ்சள்நீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

மஞ்சள்நீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

மஞ்சள்நீர் கால்வாயில் அடைப்பு துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 26, 2024 10:59 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகில், புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.

இதன் கிளை கால்வாய், மடம் தெரு அருகில் பிரிந்து மேட்டுத் தெரு, எம்.எம்.அவென்யூ, ரங்கசாமி குளம், நாகலுாத்துமேடு வழியாக சென்று, வேகவதி ஆற்றுடன் இணையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கால்வாயின் அகலம் வெகுவாக சுருங்கிவிட்டது. கால்வாயில் செடி, கொடிகள் மண்டியுள்ளன. குறிப்பாக மேட்டுத்தெருவில், சாலையின் குறுக்கே சிறுபாலம் வழியாக செல்லும் கால்வாயில், சருகு இலைகள் குவிந்துள்ளதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்புகளுக்குள் புகும் சூழல் உள்ளது.

எனவே, மஞ்சள் நீர் கிளை கால்வாயின் அகலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us