sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குன்றத்துார் கோவில் மலை பாதை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

/

குன்றத்துார் கோவில் மலை பாதை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

குன்றத்துார் கோவில் மலை பாதை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

குன்றத்துார் கோவில் மலை பாதை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஆக 16, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : சென்னை, குன்றத்துார் மலை குன்று மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானபக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

சுபமுகூர்த்த தினங்களில் கோவில் வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலைமீதுள்ள முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை மற்றும் மலை மீது தார்ச்சாலை வசதியும் உள்ளது. படிக்கட்டு பாதையில் செல்ல முடியாதோர், தார்ச்சாலையில் கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவாகனம் மூலம் சென்றடைகின்றனர்.

இதனால், விசேஷ நாட்களில் சாலையில் நெரிசல்ஏற்படுகிறது. குறுகிய சாலை என்பதால், கார்கள்ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயலும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்தில் சிக்கும் ஆபத்துஉள்ளது.

எனவே, இந்த சாலையை இருவழிசாலையாக விரிவாக்கம் செய்து, சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,'மலை மீதுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்'என்றனர்.






      Dinamalar
      Follow us