ADDED : ஜூன் 25, 2024 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் தொட்டி அருகில்
குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், அதன் அருகில் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.
குடிநீர் தொட்டி அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் குவிந்துள்ள குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.அரிகிருஷ்ணன்,
காஞ்சிபுரம்.