
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமடைந்த மின்கம்பம்
மாற்றப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி 42வது வார்டு வெங்கடாபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்தாலோ, இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் லேசாக உரசினாலோ, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கே.ஜானகிராமன்,
காஞ்சிபுரம்.