sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

/

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : ஆக 24, 2024 12:28 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், காவாந்தண்டலம் கிராமத்தில் கற்பக விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 8 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது.

நேற்று, காலை 9:15 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன் உட்பட பலர் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us