ADDED : டிச 22, 2024 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 42. இவரது பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்படி, நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 3.9 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார், மஞ்சுளாவை கைது செய்தனர்.