/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவிலில் நாளை கூழ்வார்த்தல் விழா
/
அம்மன் கோவிலில் நாளை கூழ்வார்த்தல் விழா
ADDED : ஆக 23, 2024 07:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 26வது வார்டு, நசரத்பேட்டையில், வேலாத்தம்மன், புவனகிரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கூழ்வார்த்தல் விழா, கடந்த 21ம் தேதி, காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று, காலை 7:00 மணிக்கு, வேலாத்தம்மனுக்கும், புவனகிரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் பூங்கரகம் வீதியுலா நடந்தது. மாலை 3:00 மணி ஊரணி பொங்கலும், தொடர்ந்து அஞ்சூர் சுந்தரமூர்த்தி குழுவினரின் கைச் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.
நாளை, காலை 7:00 மணி சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கலும், இரவு 7:00 மணிக்கு ஊங்சல் சேவை உற்சவம் நடக்கிறது.
வரும் 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 27ம் தேதி, இரவு 10:00 மணிக்கு ராஜா தேசிங்கு மன்றத்தினரின் நாடகமும் நடைபெறுகிறது.

