ADDED : ஆக 21, 2024 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், தேனம்பாக்கம் மேல்தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 23. இவர் மீது கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், பாலுசெட்டிசத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது வேலூர் சிறையில் உள்ளார்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று, கலெக்டர் கலைச்செல்வி, தட்சிணாமூர்த்தியை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, தட்சிணாமூர்த்தியிடம் போலீசார் வழங்கினர்.