/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளையனார்வேலுாரில் லட்சார்ச்சனை நிறைவு
/
இளையனார்வேலுாரில் லட்சார்ச்சனை நிறைவு
ADDED : மார் 06, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், லட்சார்ச்சனை பெருவிழா ஆறு நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான லட்சார்ச்சனை பெருவிழா, கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனையும், ஆறு நாட்களாக, சண்முக பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும் மஹா தீபாராதனையும் நடந்தது.
லட்சார்ச்சனை நிறைவு நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், லட்சார்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.