நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே, சாலையோரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடைப்பதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருப்புலினம் கிராம நிர்வாக அலுவலர் திலகம் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.