நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் என்றும், முதற்கட்டமாக அவரது பெயர் கஜபதி என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், முதியவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.