ADDED : பிப் 21, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், இரட்டைவாடை தெருவைச் சேர்ந்தவர் அண்ணாசாமி, 65; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாடவீதியில் கட்டட வேலை செய்யும்போது, ஏணியில் இருந்து கீழே விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின்படி, விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.