sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திறந்தநிலையில் 'மேன்ஹோல்'

/

திறந்தநிலையில் 'மேன்ஹோல்'

திறந்தநிலையில் 'மேன்ஹோல்'

திறந்தநிலையில் 'மேன்ஹோல்'


ADDED : மே 04, 2024 11:26 PM

Google News

ADDED : மே 04, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு பகுதியில் இருந்து, புத்தேரி தெரு, எஸ்.வி.என்., பிள்ளை தெரு, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருவோர் ஒ.பி.,குளம் பள்ளத்தெரு வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இந்த சாலையோரம், கடந்த மாதம் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் திறந்துவிடும் பணிக்காக 'மேன்ஹோல்' அமைக்கப்பட்டது.

இப்பணி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் 'மேன்ஹோல்' மீது சிலாப் போட்டு மூடப்படாமல் உள்ளது. சாலையோரம் 'மேன்ஹோல்' திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, 'மேன்ஹோல்' பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், திறந்து கிடக்கும் 'மேன்ஹோல்' மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடி, சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us