/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 13, 2025 01:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அடுத்த, மதுரா புதுக்கோட்டை சந்திப்பில் இருந்து, உமையாள்பரனசேரி செல்லும் பிரதான வழியே, வட்டம்பாக்கம், வளையக்கரணை உள்ளிட்ட பகுதியினர், சுற்றுவட்டார பகுதிகளுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், மதுரா புதுக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி எதிரே, இரண்டு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை எங்குள்ளது என தெரியாமல், அதில் ஏறி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்த வருகின்றனர்.
எனவே, உமையாள்பரனசேரி செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.