/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை பள்ளங்களில் மழைநீர் 'ஏழரை' போடும் வாகன ஓட்டிகள்
/
சாலை பள்ளங்களில் மழைநீர் 'ஏழரை' போடும் வாகன ஓட்டிகள்
சாலை பள்ளங்களில் மழைநீர் 'ஏழரை' போடும் வாகன ஓட்டிகள்
சாலை பள்ளங்களில் மழைநீர் 'ஏழரை' போடும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 08, 2024 04:23 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் - மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை வழியாக செல்லும் பயணியர், கூரம் கேட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர்.
இச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் 'ஏழரை' போடும் அவலநிலை உள்ளது.
மேலும், இச்சாலையில் உருவாகியுள்ள மரண பள்ளங்களில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த இச்சாலையை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.