sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

/

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா


ADDED : மே 13, 2024 03:33 AM

Google News

ADDED : மே 13, 2024 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் மேல்கரையில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், அனுக்கிரகத்துடன் 19ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா, கடந்த 10ம் தேதி, காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரத்துடன் துவங்கியது.

குமரகோட்டம் தலைமை அர்ச்சகர் காமேஸ்வர குருக்கள் தலைமையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து களியனுார் செல்லியம்மன் கலைகுழுவினரின் பம்பை, கைச்சிலம்பாட்ட நிகழ்ச்சியும், அம்மன் வர்ணிப்பும் நடந்தது.

நேற்று, காலை 8:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து கரகம் மற்றும் பால்குடம் வீதியுலா நடந்தது. இதில், பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், உடலில் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்வும், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.

இன்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us