/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு விரைவில் புதிய கட்டடம்
/
வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு விரைவில் புதிய கட்டடம்
வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு விரைவில் புதிய கட்டடம்
வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு விரைவில் புதிய கட்டடம்
ADDED : ஜூன் 30, 2024 11:17 PM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்குகிறது.
வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4,900 பேர் இந்த கிளை நுாலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உள்ளிட்டோர் இந்த நுாலகத்திற்கு வந்து செய்தித்தாள்கள் மற்றும் அரசு தேர்வு பாடநுால்கள், பொது அறிவு புத்தகங்கள் படிக்கின்றனர்.
இந்த நுாலகம் போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்குவதோடு, நுாலகத்திற்கான கட்டடமும் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் ஆபத்தான இந்த கட்டடத்தை அகற்றி, கிளை நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் கிளை நுாலக ஊழியர் ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாத் கிளை நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் அதற்கான இடமும் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. அந்த இடம் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதால், கால்நடைத் துறையிடம் அனுமதி பெற வேண்டி இருந்தது. அதற்கான அனுமதி கடிதமும் பெற்று வருவாய் துறையினரிடத்தில் வழங்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.