/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரத்தில் முட்செடிகள் சதாவரத்தில் பாதசாரிகள் அவதி
/
சாலையோரத்தில் முட்செடிகள் சதாவரத்தில் பாதசாரிகள் அவதி
சாலையோரத்தில் முட்செடிகள் சதாவரத்தில் பாதசாரிகள் அவதி
சாலையோரத்தில் முட்செடிகள் சதாவரத்தில் பாதசாரிகள் அவதி
ADDED : ஜூன் 03, 2025 12:44 AM

காஞ்சிபுரம், ஜூன் 3-
காஞ்சிபுரம் மாநகராட்சி, 49வது வார்டு, சதாவாரம் பிரதான சாலையோரம், போக்குவரத்திற்கு இடையூறாக சீமை கருவேல மரத்தின் கிளை, சாலை பக்கம் நீண்டு வளர்ந்துள்ளது.
இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, இச்செடிகளில் உள்ள கூர்மையான முட்கள், கண், முகம், கை உள்ளிட்ட உடல் பாகங்களை பதம் பார்த்து விடுகிறது.
எனவே, போக்குவரத்ததிற்கும், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக, சதாவரம் பிரதான சாலையோரம் உள்ள சீமை கருவேல முட்செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.