ADDED : செப் 04, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, தெரேசாபுரம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறைபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று காலை, ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் சாலையில், தெரேசா புரம் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் மது விலக்கு அமலாக்கத் துறை போலீசார் சோதனையில்ஈடுபட்டனர்.
அதில், விமல், ஹாண்ஸ், சுவாகத்உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 60,000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் துரை, 72, என்பவரை ஒரகடம் போலீசார் கைது செய்துவிசாரிக்கின்றனர்.