sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓரிக்கையில் வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

/

ஓரிக்கையில் வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

ஓரிக்கையில் வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

ஓரிக்கையில் வரும் 21ல் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் துவக்கம்

1


ADDED : ஜூலை 08, 2024 05:20 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜையை வரும் 21ம் தேதி துவக்குகிறார் என, சங்கரமடம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம்சங்கரமடத்தின் மேலாளர்ந.சுந்தரேச அய்யர் தெரிவித்திருப்பதாவது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்தை வரும் 21ல் துவக்கி, செப்டம்பர் மாதம் 18ம் தேதி வரை, ஓரிக்கை, மஹா பெரியவர் மணிமண்டபத்தில் கடைப்பிடிக்க இருக்கிறார்.

சாதுர்மாஸ்ய விரதம் என்பது ஆடி மாத பவுர்ணமி முதல், கார்த்திகை மாத பவுர்ணமி வரை என, தொடர்ந்து 4 மாதங்கள் கடைப்பிடிக்கக் கூடிய சக்தி மிக்க விரதங்களில் ஒன்றாகும்.

துறவியர் வேதவியாசரை வழிபட்டு இந்த விரதத்தை தொடங்குவார். இவ்விரத நாட்களில் துறவியர்களை வழிபடுவது மிகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் இவ்விரதத்தை காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள் மணிமண்டபவளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட பூஜை மண்டபத்தில் கடைபிடிக்க உள்ளார்.

இவ்விரத நாட்களின் போது திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீசுவரருக்கு சிறப்பு பூஜை, உலக நன்மைக்காக சதுர்வேத பாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

வரும் 27ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மகோற்சவமும் ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது.

பக்தர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசி பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us