sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் செல்லும் வழியில் 'உவ்வே...' கிளப்பும் அவலம்

/

கோவில் செல்லும் வழியில் 'உவ்வே...' கிளப்பும் அவலம்

கோவில் செல்லும் வழியில் 'உவ்வே...' கிளப்பும் அவலம்

கோவில் செல்லும் வழியில் 'உவ்வே...' கிளப்பும் அவலம்


ADDED : செப் 12, 2024 02:00 AM

Google News

ADDED : செப் 12, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை பேராசிரியர் நகர் 2வது பகுதியில், 100க்கும் மேற்பட்டவீடுகள் உள்ளன.

இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி இல்லை.

இதனால், அப்பகுதியில் உள்ள காலி மனைகளிலும், சாலையோரம் உள்ள மண் கால்வாயிலும் வீட்டு உபயோக கழிவுநீருடன், மழைநீர் கலந்து தேங்கியுள்ளது.

மழைநீர் வெளியேறும் வகையில், பூங்கா ஒட்டியுள்ள சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டதால், இப்பகுதியினர், பள்ளத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக பெண்கள் கால்வாயை தாண்டும்போது, நிலைதடுமாறி விழும் சூழல் உள்ளது.இதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள குபேர விநாயகர் கோவில் எதிரில், கழிவு நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே வந்து செல்கின்றனர்.

இதனால், பேராசிரியர் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பேராசிரியர்நகர் 2ல், சாலையின் குறுக்கே கால்வாய்வெட்டிய இடத்தில், சிறுபாலம் அமைப்பதோடு, மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில், 'கான்கிரீட்' கால்வாய் அமைக்க வேண்டும்என, அப்பகுதியினர்வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us