sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையம் கரும்பாக்கத்தில் திறப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் கரும்பாக்கத்தில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் கரும்பாக்கத்தில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் கரும்பாக்கத்தில் திறப்பு


ADDED : ஆக 14, 2024 09:41 PM

Google News

ADDED : ஆக 14, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், நடப்பாண்டு சொர்ணவாரி பட்டத்திற்கு, 8,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

கதிர் முற்றிய பயிர்களை, சில நாட்களாக அறுவடை செய்து வருகின்றனர். இதனால் சொர்ணவாரி பட்டத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம், அரும்புலியூர், சீத்தாவரம், களியப்பேட்டை ராஜம்பேட்டை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், ஆழ்துளை கிணற்று பாசனம் வாயிலாக அதிக நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது, இப்பகுதி விவசாயிகள், நெல் அறுவடை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதையடுத்து, இந்த கிராமங்களின் மைய பகுதியான கரும்பாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.

உத்திரமேரூர் தி.மு.க ., - எம்.எல்.ஏ., சுந்தர் கொள்முதல் நிலையத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்து, அங்கு விளைவிக்கும் நெல் ரக வகைகள் மற்றும் விவசாயிகளின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதேபோல, பினாயூர் கிராமத்திலும் நேற்று முன்தினம் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us