sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிற மாவட்ட தாசில்தார்கள் நியமிக்க எதிர்ப்பு

/

பிற மாவட்ட தாசில்தார்கள் நியமிக்க எதிர்ப்பு

பிற மாவட்ட தாசில்தார்கள் நியமிக்க எதிர்ப்பு

பிற மாவட்ட தாசில்தார்கள் நியமிக்க எதிர்ப்பு


ADDED : ஜூலை 22, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் மற்றும் சுற்றுவட்டார 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது.

இதற்கான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள, 24 யூனிட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலமும், ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செயல்படுகிறது.

அதேசமயம், ஒவ்வொரு யூனிட்டிலும், ஒரு தாசில்தார், சர்வேயர் என, மொத்தம் 326 வருவாய் துறை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

அந்தவகையில், தாசில்தார்களே 24 பேர் தேவைப்படுகின்றனர்.வேறு வழியில்லாமல், வெளி மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை அழைக்கவேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு, வருவாய் துறை அலுவலர்கள் சங்கமும், வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சங்கத்தினர், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார்களாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us