/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பின்றி ஒரகடம் மேம்பாலம்
/
பராமரிப்பின்றி ஒரகடம் மேம்பாலம்
ADDED : ஆக 27, 2024 12:57 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜபாத் சாலைகள் இணையும் நான்குசாலை சந்திப்பில் ஒரகடம் மேம்பாலம் உள்ளது.
மேம்பாலம் வழியாக, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், மேம்பாலத்தின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மேம்பாலத்தின் சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாகவும் காணப்படுகின்றன. அதேபோல, மேம்பால சாலைகளில் அதிக அளவில் மண் குவிந்துள்ளது.
இதனால், மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மேம்பாலத்தின் சாலைகளை சீரமைத்து, முறையாக பராமரிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.