/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூவம் ஆக்கிரமிப்பு விவகாரம் அறிக்கை அளிக்க உத்தரவு
/
கூவம் ஆக்கிரமிப்பு விவகாரம் அறிக்கை அளிக்க உத்தரவு
கூவம் ஆக்கிரமிப்பு விவகாரம் அறிக்கை அளிக்க உத்தரவு
கூவம் ஆக்கிரமிப்பு விவகாரம் அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : ஆக 11, 2024 04:55 AM
சென்னை : கோயம்பேடு அருகே கூவம் ஆற்றங்கரையில், 10 அடி அளவுக்கு மணல், குப்பையை கொட்டி, நில ஆக்கிரமிப்பாளர்கள்சமன்படுத்தி உள்ளனர். இதை தடுக்க, சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விதிகளின்படி, ஆறுகளின் கரையில் இருந்து 15 மீட்டர் இடைவெளியில், பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும். ஆனால், இந்த பாதுகாப்பு மண்டல பகுதியிலேயே மணல், குப்பையை கொட்டியுள்ளனர்' என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கோயம்பேடு அருகே கூவம் நதி, நில ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து, சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத் துறை, சென்னை கலெக்டர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது விசாரணையை, 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

