ADDED : ஆக 27, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், சேலையூர் அடுத்த கவுரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 35; பெயின்டர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கினார்.
அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதை கவனித்து, கோதண்டபாணியின் உறவினர் களிடம் கூறினர்.
அவர்கள்போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து, கோதண்டபாணியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், அவர் மதுபோதையில் குளித்தது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.