sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு

/

நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு

நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு

நெசவாளர்களுக்கு ரொக்கமாக கூலி வழங்க கோரி அமைச்சரிடம் மனு


ADDED : மார் 06, 2025 12:17 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி, சங்க அலுவலகத்தில், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு செய்ததற்கான கூலியை, நெசவாளர்ளின் வங்கியில் வரவு வைக்க, கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது.

நெசவு கூலியை நெசவாளர்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதால், நெசவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக, கம்யூனிஸ்ட், - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிகள் கூட்டு குழுவின் சார்பில், கைத்தறி துறை அமைச்சர் காந்தியிடம், நெசவுக்கான கூலியை, நெசவாளர்களிடம் ரொக்கமாக வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினர்.

இதில், பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us