/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மன்ற கூட்ட தீர்மானங்கள் வாக்கெடுப்பு நடத்த மனு
/
மன்ற கூட்ட தீர்மானங்கள் வாக்கெடுப்பு நடத்த மனு
ADDED : செப் 01, 2024 01:42 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், புனிதா சம்பத், சிந்தன், சாந்தி சேதுராமன், ஜோதிலட்சுமி ஆகியோர், மாமன்ற கூட்ட தீர்மானங்கள் நேரடி வாக்கெடுப்பு வாயிலாக நடத்த கோரி, கமிஷனரிடம் மனு அளித்தனர்.
மனு விபரம்:
நாளை மறுதினம், மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., உறுப்பினர்களின் வார்டுகளுக்கு அடிப்படை பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் இடம் பெறவில்லை.
தீர்மான புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தீர்மானத்தையும், நேரடி குரல் வாக்கெடுப்பு வாயிலாக அல்லது கரம் உயர்த்துதல் எண்ணிக்கை வாயிலாக நிறைவேற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.