sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி

/

குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி

குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி

குமரகோட்டம் கோவிலில் உழவாரப் பணி


ADDED : ஆக 25, 2024 11:19 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 2007ல் துவக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர், 17 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ கோவிலில் சென்று உழவாரப் பணி செய்து வருகின்றனர்.

அதன்படி, 205வது மாத உழவாரப் பணியாக காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். இதில், கோவில் உட்பிரகாரம், வெளிபிரகாரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.

மேலும், நந்தவனம் மற்றும் குளக்கரை பகுதியில் புதர்போல மண்டிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றினர்.

தீபம் ஏற்றுமிடத்தில் இருந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர்.

கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள விரும்பும் கோவில் நிர்வாகத்தினரும், உழவாரப் பணியில் ஈடுபட்டு தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் 94454 08153, 97512 35808 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us