sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

56 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் மொழித்தேர்வில் 185 பேர் 'ஆப்சன்ட்'

/

56 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் மொழித்தேர்வில் 185 பேர் 'ஆப்சன்ட்'

56 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் மொழித்தேர்வில் 185 பேர் 'ஆப்சன்ட்'

56 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் மொழித்தேர்வில் 185 பேர் 'ஆப்சன்ட்'


ADDED : மார் 04, 2025 01:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

தமிழகம் முழுதும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. இம்மாதம் 25ம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 தேர்வுக்கான மொழித்தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கல்வித்துறை, தேர்வுத்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

முதல் நாள் பொதுத்தேர்வு என்பதால், தேர்வு எவ்வாறு எழுத வேண்டும்.

மாணவ -- மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள 56 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.

இந்த தேர்வு மையங்களுக்கு, 56 முதன்மை காப்பாளர்கள், 80 பறக்கும் படையினர், பிளஸ் 2 தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 107 பள்ளிகளைச் சேர்ந்த, 6,617 மாணவர்களும், 7,310 மாணவியர் என, 13,927 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர்.

இதில் 185 மாணவர்கள் நேற்று மொழித்தேர்வில் 'ஆப்சன்ட்' ஆகினர்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியர் அறைக்கு சென்று பார்வையிட்டார்.

போனுக்கு தடை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 56 தேர்வு மையங்களில், அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், 'பள்ளித் தேர்வர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் யாரும் தங்களுடன் மொபைல்போனை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. 'ஆள் மாறாட்டம், வினாத்தாள், விடைத்தாள் மாற்றம் போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால், தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.








      Dinamalar
      Follow us