sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்னணு கழிவுகளால் ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மாசு 

/

மின்னணு கழிவுகளால் ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மாசு 

மின்னணு கழிவுகளால் ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மாசு 

மின்னணு கழிவுகளால் ஆண்டி சிறுவள்ளூர் ஏரி மாசு 


ADDED : ஆக 08, 2024 02:34 AM

Google News

ADDED : ஆக 08, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தில், நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, ஆண்டி சிறுவள்ளூர், ஆண்டிதாங்கல், புதுநகர் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த ஏரியையொட்டி, பரந்துார் - பொன்னேரிக்கரை பிரதான சாலை செல்வதால், குப்பை, தொழிற்சாலை கழிவுகள், மின்னணு கழிவுகளை ஏரியில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு கால்களில் காயம் ஏற்படுவதோடு, மின்னணு பொருட்களை எரிப்பதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரிகளில் கழிவுகளை கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us