sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செவிலிமேடில் மின்வெட்டு நள்ளிரவில் சாலை மறியல்

/

செவிலிமேடில் மின்வெட்டு நள்ளிரவில் சாலை மறியல்

செவிலிமேடில் மின்வெட்டு நள்ளிரவில் சாலை மறியல்

செவிலிமேடில் மின்வெட்டு நள்ளிரவில் சாலை மறியல்


ADDED : செப் 13, 2024 06:57 PM

Google News

ADDED : செப் 13, 2024 06:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே செவிலிமேடில், சமீப நாட்களாக மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது.

மின்வாரியத்திற்கு மொபைல்போன் வாயிலாக புகார் அளித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், செவிலிமேடு பகுதிவாசிகள், திடீரென காஞ்சிபுரம்- - வந்தவாசி சாலையில், இரவு 11:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர், அப்பகுதிவாசிகளிடம் பேச்சு நடத்தினர்.

மின்வெட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இரவு 12:30 மணிக்கு மின்சாரம் சீரானது.






      Dinamalar
      Follow us