/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழுகிய நிலையில் கர்ப்பிணி உடல் மீட்பு
/
அழுகிய நிலையில் கர்ப்பிணி உடல் மீட்பு
ADDED : ஜூன் 08, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தேவி, 30, மூன்று மாத கர்ப்பிணி. இவர், மொளச்சூர் பகுதியில், எம்ராய்டிங் வேலை செய்து வந்தார். கடந்த, 6ம் தேதி, வேலைக்கு செல்வதாகக் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று, மொளச்சூர் கால்வாய் ஒன்றில், அழுகிய நிலையில் இளம் பெண் உடலை சுங்குவார்சத்திரம் போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தேவி என தெரிய வந்தது. போலீசார் உடலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.