sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புஞ்சையில் சாலையோர பள்ளம் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

/

புஞ்சையில் சாலையோர பள்ளம் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

புஞ்சையில் சாலையோர பள்ளம் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

புஞ்சையில் சாலையோர பள்ளம் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு


ADDED : செப் 02, 2024 05:46 AM

Google News

ADDED : செப் 02, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, திருவண்ணாமலை, அய்யங்கார்குளம், செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தை கடந்து புஞ்சையரசந்தாங்கல் வழியாக சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள புஞ்சையரசந்தாங்கல் சாலையோரம், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கினர்.

எனவே, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மண் அணைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் அணைத்து சமன்படுத்தப்பட்டு, சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us